Wednesday, December 31, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஒன்பதாம் அதிகாரம் – பாடற்றொண்டு


 
சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை


சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - இரண்டாம் அதிகாரம் - இல்வாழ்க்கை


சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஐந்தாம் அதிகாரம் – பிரசங்கம்


சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – எட்டாம் அதிகாரம் – தருமஸ்தாபனம்
 

ஒன்பதாம் அதிகாரம் – பாடற்றொண்டு



ஐயா அவர்கள் பால்ய முதல் நித்திய நியம பாராயணமும் சிவபூசையும் சிவதரிசனமும் செய்வதுடன், பெரியோர்கள் சார்பும், கல்வி சாஸ்திராராய்ச்சியுமுள்ள  விற்பன்னராக விருந்தபடியால் சுயமாக விரைவிற் கவிதைபாடுவதில் அதிசாமர்த்திமுள்ளவர்களாக இருந்தார்கள்.

 முதலில் தம்முடைய குருநாதராகிய ஸ்ரீலஸ்ரீ வன்றொண்டரவர்கள்  மீது, "வன்றொண்ட குருஸ்துதி" என்னும் ஓர் பதிகம்பாடி, அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார்கள். அதன்பின், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள்  குருவணக்கமும், ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப சுவாமிகள் குருவணக்கமும், மேற்படி சுவாமிகளது சரித்திர சங்கிரகமும், விநாயகர் சுப்பிரமணியர், சிவபெருமான், உமாதேவியார், சமயா சாரியார்கள், சந்தானா சாரியார்கள், அறுபத்து மூவராதியடியார்கள், முதலானவர்களுக்கும், சிவஸ்தலங்களுக்கும், புராணம், மான்மியம், பதிகம், மாலை, அந்தாதி, சிலேடை, வெண்பா, பிள்ளைத்தமிழ், சந்தவிருத்தம், திருவூசல், நவமணி மாலை, திருவிரட்டைமணி மாலை, மும்மணிக் கோவை, மஞ்சரி, ஸ்தவம், நமகம், அஷ்டகம், கண்ணி, நாமாவளி முதலிய செந்தமிழ்ச் செய்யுள் நூல்களும், வசன நூல்களும், இயற்றி அச்சிட்டு உபகரித்திருக்கிறார்கள். அவ்வாறு வெளியிட்ட நூல்கள் நூற்றெட்டாகும். அந்நூல்களின் பெயர்களை இதனோடு சேர்க்கப்பட்டிருக்கும் அட்டவனையில் காணலாம், அந்நூல்களெல்லாம் சிவபரத்துவத்தையே விளைக்குந்தன்மையுடையன.

 
ஐயா அவர்களுடைய கையெழுத்து.


 

(மூலநூலில் உள்ள இந்த பகுதியை அப்படியே ஸ்கேன் செய்து எடுத்துப் பதிவிட்டிருக்கிறேன்.)


இவையன்றியும் தக்கவித்துவான்கள் இயற்றிய நூல்களுக்குக் கொடுத்திருக்கின்ற சாற்றுக் கவிகளும், சிவாலய முதலிய திருப்பணி, கும்பாபிஷேக, உற்சவ, பாலஸ்தாபன, முதலிய முகூர்த்தங்கட்கும் எழுதிக்கொடுத்த பத்திரிக்கைகளும் செய்யுட்களும் அளவில்லாதனவாகும்.

 
ஐயா அவர்கள், வேண்டுஞ் சமயம் நிமிஷ கவியாகப் பாடக் கூடியவர்களானபடியால், ஓர் மாணாக்கர், பாராயணஞ் செய்தற் பொருட்டு திருவெம்பாவைச் செய்யுட்களுக்கும், கந்தரனுபூதிச் செய்யுட்களுக்கும், செய்யுள் முதற் குறிப்புத் தெரிந்துகொள்ள ஒவ்வோர் செய்யுளாக வேண்டுமென்று கேட்டுக்கொண்டதற்கு, உடனே ஐயா அவர்கள் சொல்லிய செய்யுட்களாவன,

 
           "ஆதி பாச  முத்தன்ன

                வொண்ணித் திலமா லறிமானே

           மோத மாரன் னேகோழி

                முன்னை பாதா ளம்மொய்யார்

           ஓது மார்த்த பைங்குவளை

                யொடுகா தாரோ ரொரு முன்னிக்

           காதற் செங்கண் ணண்ணாவுங்

                கைபோற் றியுமெம் பாவைமுதல்"

           "மாதிருமு னெஞ்சாடு லாசவா

                னேர்புவழை மகமாயை திணியாகெடு

           வாயமரு மட்டுகார் கூகாசெம்

                முருககை வாய்முருக பேராசையா

           மோதியுதி வடிவுமரி கருகாளை

                யுடிகூர்மெய் யோதுமாதார மின்னே

           யுரைசெய்யு மானாவ வில்லேசெவ்

                வான்பா ழுணர்த்துகலை யேபசிந்தா

           சாதிசிங் காரவிதி நாதாகு

                கிரியொடா தாளிமா வேழ்சவினையோ

           சாகாகு றியைதூசு சாடுகர

                வாகியெந் தாயுமா றாறையெறிவொன்.

           றாதிசார் தன்னந் தனிமதியொ

                டுருவாகி யைம்பதிற் றிரண்டுகாப்போ

           டாவிமுழு தருளம்பி காவலவர்

                தருகந்த ரனுபூதி கவிகண்முதலே."
 

ஒன்பதாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.

 

உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Monday, December 29, 2014

ஆஸ்திரேலியா: வழிகாட்டி தொடர் – 3 (வழிப்பாட்டு ஸ்தலங்கள்)



சில மாதங்களாக இந்த தொடரை எழுத முடியாமல் போய்விட்டது.

"மற்ற மூன்று விசாக்களைப் பற்றி (“TOURIST”, “WORK VISA” மற்றும் “STUDENT”) பார்க்கலாம் என்று சென்ற பகுதியில் முடித்திருந்தேன்".
இப்போது அதற்கு முன்பாக சிட்னியில் இருக்கும் கோயில் ஸ்தலங்களை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.


"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று சொல்லுவார்கள். இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலியாவில் தைரியமாக குடியேறலாம். ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் நம்முடைய கோயில் இருக்கிறது.
சிட்னியில் எனக்குத் தெரிந்த கோயில்களை நான் பட்டியலிடுகிறேன். சிட்னியை சுற்றிப் பார்க்க வருவோருக்கும், இங்கேயே குடியேறியவர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.



ஹிந்து கோயில்கள்:

சிட்னி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்



சிட்னி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்
123, Crescent , Homebush West
NSW – 2143
PH: 02-9746 9590


சிட்னி முருகன் கோயில்





சிட்னி முருகன் கோயில்
217 Great Western Hwy,
Mays Hill, Sydney NSW – 2145
PH: 02-9687 1695



வெங்கடேஸ்வரா கோயில்


வெங்கடேஸ்வரா கோயில்
Temple Road Helensburgh, NSW – 2508
PH: 02-4294 3224


 சிவன் கோயில்


சிவன் கோயில்
201 Eagleview Road
Minto, NSW – 2566
PH: 02-/0418 247 577


சிவன் கோவில்



மற்றுமொரு சிவன் கோவில்
203 Eagleview Road
Minto, NSW-2566
PH:02-9820 3751


 சிட்னி ஐயப்பன் கோயில்



சிட்னி ஐயப்பன் கோயில்
Unit 20, 116-118 McCredie Road
Guildford West
NSW-2161
PH:02-9681 6896


துர்க்கை அம்மன் கோயில்




துர்க்கை அம்மன் கோயில்
21-23 Rose Crescent
Regents Park, NSW – 2143
PH:02-9644 6682


ஹரே கிருஷ்ணா  கோயில் (ISKCON)


ஹரே கிருஷ்ணா  கோயில் (ISKCON)
180 Falcon Street,
North Sydney NSW-2060
PH: 02-550 6254



ஸ்ரீ மந்திர்
286 Cumberland Road, 
Auburn, NSW- 2144
PH: 0423 341 604



ஷீரடி சாய்பாபா கோயில்



ஷீரடி சாய்பாபா கோயில்
420 Liverpool Road
Strathfield, NSW
PH: 1300 524 724



பின் குறிப்பு - மற்ற மூன்று விசாக்களைப் பற்றி (“TOURIST”, “WORK VISA” மற்றும் “STUDENT”) விரைவில் எழுதுகிறேன் 

Monday, December 22, 2014

செல்போன் வைத்திருந்தால் இப்படியும் ஏமாற்றப்படுவீர்கள்!!!!

 
 
 
சில பல வருடங்களுக்கு முன்பு வரை, மின்னஞ்சல் மூலமாக ஊர் பேர் தெரியாத நபர்களிடம் வரும் மின்னஞ்சலின் மூலமாக நிறைய பேர் பணத்தை இழந்திருக்கிறார்கள். இப்போது மும்பையில் ஒரு கூட்டம் வினோத முறையில் செல்போன் வைத்திருக்கும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் பகிர்ந்து கொண்ட இந்த செய்தியை படித்தபோது, இப்படியெல்லாம் கூடவா ஏமாற்றுவார்கள் என்று தான் நினைக்கத் தோன்றியது. நகைச்சுவைக்காக, அரசியல்வாதிகள் எந்த ஒரு பணியையும் செய்து முடிக்காமல், முடித்து விட்டதாக கணக்கு காமித்து பணத்தை பெற்றுக்கொள்வார்கள் என்று கூறுவதுண்டு(சில நேரங்களில் அது உண்மையாக கூட இருக்கலாம்!!). அம்மாதிரி இந்த ஏமாற்றுக்கூட்டம், ஒருவரை கடத்தாமலேயே, அந்த மனிதரின் குடும்பத்தாருக்கு கடத்தியமாதிரி கணக்கை காமித்து,அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுவிடுகிறார்கள். இந்த செய்தியில் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது, அவற்றை எல்லாம் நான் இறுதியில் சொல்கிறேன். இனி, மும்பையில் இந்த நவீன கொள்ளையர்களிடம் பணத்தை ஏமாறாமல் தப்பித்துக்கொண்ட ஒருவருடைய அனுபவத்தை அவரின் வார்த்தைகளிலேயே கேட்போம்.
Given below is happened to someone
&
He has narrated this in his own words :-
"I received a call from someone claiming that he was from my mobile Service provider
and
He asked me to shut down my phone for 2 hours for 3G update to take place.
As I was rushing for a meeting,
I did not question,
But just shut down my cell phone.
 
After 45 minutes?
I felt very suspicious, Since the caller did not even introduce his name.
I quickly turned on my cell phone and saw several missed calls from my family members.
 
And, the others were from the number that had called me earlier.
 
I called my parents
and
I was shocked that they sounded very worried asking me whether...
I am safe.
 
My parents told me that they had received a call from someone claiming that they had me with them ,
and asking for money to let me free.
The call was so real and my parents even heard 'My Voice'
Crying out loud asking for help.
 
My father was at the bank waiting for next call to proceed for money transfer.
 
I told my parents that,
I am safe and asked them to lodge a police report.
 
Right after that I received another call from the guy asking me to shut down my cell phone for another 1 hour which I refused to do and hung up.
 
They kept calling my cell phone until the battery had run down.
I, myself lodged a police report and I was informed by the officer that there were many such scams reported.
 
MOST of the cases reported that the victim had already transferred the money...!
And,
It is impossible to get back the money.
 
Be careful as this kind of scam might happen to any of us...!!!
 
Those guys are so professional and very convincing during calls.
 
If you are asked to
shut down your cell phone for updates by the service provider,
ASK AROUND...!
Your family or friends might receive the same call.
 
Be Safe and Stay Alert...!
 
Please pass around to your family and friends...!!!
 
 
இதில், எனக்கு புரியாத விஷயங்கள் என்னவென்றால், அவரின் பெற்றோர்கள், அவருடைய அலுவலகத்துக்கோ, அலுவலக நண்பர்களுக்கோ போன் செய்து கேட்டிருக்கலாம். (அவர்களுக்கு அந்த நேரத்தில் தோன்றாமல் போயிருக்கலாம்). போலீஸிடம் புகார்கள் வந்தபோது, அந்த கொள்ளைக்காரர்கள் பயன்படுத்திய அலைபேசியின் எண்ணை வைத்து அவர்களை பிடித்திருக்கலாம். இன்னும் அந்த வங்கிக்கணக்கை வைத்தாவது அவர்களை பிடித்திருக்கலாம்.
 
சரி, எது எப்படியோ நாம் ஏமாறாமல் உஷாராக இருந்தால்,நம்மை எவ்வாறு ஏமாற்ற முடியும்.
இது மாதிரி, அலைபேசியால் ஏற்படும் இன்னும் சில தொந்தரவுகளையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
People have been receiving calls from
+375602605281,
+37127913091
or
any number starting from
+375,
+371 number.
One ring & hang up.
 
If you call back it's one of those Numbers that are charged 15-30$
&
they can copy your contact list in 3sec
&
If U have bank
or
Credit card details on your phone,
they can copy that too...
 
+375 is from Belarus From Afghanista..
+371 is code for Lativa...
 
Don't answer
or
Call back.
 
Please FORWARD
AND SHARE this to your friends and family VERY IMP't MSG...
 
Also,
PLEASE READ... this...
 
Don't Press
#90
or
#09
on your Mobile No...
 
Please take care,
IF SOME ONE ASKs YOU TO DIAL
#09
or
#90.
Please Do Not Dial this When Asked.
 
Please circulate URGENTLY.
 
Friend,
There is a fraud company using a device that once you press
#90
or
#09.
they can access your SIM card
and
Make calls at your expense.
 
Forward this message to as many friends as U can, to stop it.
 
- BHARAT SANCHAR NIGAM LIMITED
(A Government of India)
 
 
நண்பர்களே, உஷாராக இருங்கள். மற்றவர்களோடும் இதனை பகிர்ந்துக்கொண்டு அவர்களையும் உஷாராக இருக்கச் சொல்லுங்கள்.