Thursday, November 14, 2013

தமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்

வெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்ற நாடு, ஆங்கில மொழி பேசும் நாடாகும். ஆனால் அவர்கள் நம் தாய் மொழியான தமிழை மறக்காமல் இருப்பதற்கு, அவர்களை வீட்டிலும், நம் நண்பர்களிடமும் தமிழிலேயே உரையாட வற்புறுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு தமிழில் எழுத படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இவையெல்லாம்  பெற்றோர்களாகிய நமது கடமை. ஆனால் என்னதான் நாம் வீட்டில் அவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தாலும் , அவர்கள் அதை உள்வாங்கி கற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.  இதில் அரிதாக சில குழந்ததகள் விதி விலக்காகும். மேலும் நாமும் கற்றுக்கொடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் அவர்களுக்கு காலப்போக்கில் தமிழ் எழுதப்படிக்க தெரியாமல் போய்விடுகிறது.  இங்கு ஆஸ்திரேலியாவில் நிறைய தமிழ் பள்ளிக்கூடங்கள்  தமிழை சொல்லிக்கொடுக்கும் பணியை பல வருடங்களாக நடத்தி வருகிறது. மேலும் இங்கு 12ஆம் வகுப்பில் தமிழையும் ஒரு பாடமாக எடுத்து இரண்டு யூனிட்டுகள் எழுதுவதற்கும் அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. தமிழ் படிப்பதற்கு இவ்வளவு வசதிகள் இருந்தும், நிறைய தமிழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்கள்.
 
அந்த மாதிரியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக, அடியேன் இந்த நாடகத்தை எழுதினேன். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்கின்ற ஒரு தமிழ் குழந்தை வீட்டில் எவ்வாறு தமிழ் கற்றுக்கொள்கிறது என்பதை நகைச்சுவையோடு இங்கு இரண்டு மேடைகளில் நடித்துக்காட்டியவர்கள்  "பாலர் மலர் ஹோல்ஸ்வோர்தி" தமிழ் பள்ளியின் மலரும் மொட்டுக்கள்" . இந்த நாடகத்தில் நடித்த அனைத்து குழந்தைகளுமே 4வயது முதல் 8வயது வரை உள்ள குழந்தைகள்.
 





 
 கதாப்பாத்திரங்கள்
தந்தையாக – வருண்
தாயாக  – சவிதா
மகளாக – ஓவியா
தமிழ் சொல்லிக்கொடுப்பவராக  – இலக்கியா
தமிழ் பள்ளி முதல்வராக – அக்க்ஷித்


சவிதா: நம்ம பொண்ணுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிறீங்களா?

வருண்: நான் சொல்லிக்கொடுத்தா, அவ கத்துக்க மாட்டேங்கிறா. அதனால  இந்தியாவிலிருந்து போன வாரம் வந்த இலக்கியா சொல்லித்தறேன்னு சொல்லியிருக்காங்க. பார்க்கலாம், அவுங்க கிட்டையாவது தமிழ் கத்துக்கிறாளான்னு .

(இலக்கியா வருகிறார்)

இலக்கியா: வணக்கம். நல்லா இருக்கீங்களா?

சவிதா: நல்லா இருக்கோம். எங்க பொண்ணுக்கு நல்லா தமிழ் சொல்லிக்கொடுங்க.

இலக்கியா: நல்லா சொல்லிக்கொடுக்கிறேன்.

வருண்: ஓவியா, ஓவியா

(ஓவியா வருகிறார்)

ஓவியா: What Dad?

வருண்: இவுங்க தான் உனக்கு தமிழ் சொல்லி கொடுக்க போறாங்க.

ஓவியா:  Is it! Hey, I am Oviya. How are you? What’s your name?

இலக்கியா: என் பேரு இலக்கியா. நான் உங்களுக்கு முதல்ல அ,,,ஈ சொல்லிக்கொடுக்க போறேன்.

ஓவியா: OK.

இலக்கியா: அ,,  ,,  ,,  ,,  ,  ,

ஓவியா: Stop. Stop. You are Wrong.

இலக்கியா: தப்பா, என்ன தப்பு

ஓவியா: you told only ஒன் ஐ. But there are 2 ’s.  ,ஐய்!!!

இலக்கியா: ஒரு ஐ தான் இருக்கு.

ஓவியா: no no, see  ,,  ,,  ,,  ,  so ,ஐய்!!!

இலக்கியா: ஐயோ! சரி, இதை சொல்லுங்க. அ-அம்மா

ஓவியா: அ-அம்

இலக்கியா: அம் இல்லை, அம்மா, சொல்லுங்க அம்மா.

ஓவியா: no,no am only. we tell மம்மிய மாம், daddyயை dad. So, அம்.

இலக்கியா: ஐயோ,ஐயோ,(தலையில் கை வைத்துக்கொள்கிறார்). சரி, பரவாயில்லை, உங்களுக்கு காய், பழங்கள் எல்லாம் சொல்லித்தறேன்.

 ஓவியா: OK

இலக்கியா: வாழக்காய் – வாழைப்பழம்

           மாங்காய் – மாம்பழம்

ஓவியா:  I will tell one.

இலக்கியா: சொல்லுங்க

ஓவியா: தேங்காய் – தேங்காப்பலம்

இலக்கியா: தேங்காய் பழம் எல்லாம் இல்லை.

ஓவியா: Why இல்லை, வாலக்காய் – வாலப்பலம், then தேங்காய் – தேங்காப்பலம் correct தான்.  

இலக்கியா: (கோபமாக) அப்படி எல்லாம் கிடையாது.

ஓவியா: mum,dad(கோபமாக கத்துகிறார்)

(வருனும்,சவிதாவும் ஓடி வருகிறார்கள்)

வருண்/சவிதா: என்னம்மா,

ஓவியா: She doesn’t know tamil . She is telling wrong. I don’t want to learn.

(கோபமாக எழுந்து போகிறார்)

இலக்கியா: உங்க பொண்ணுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தா, எனக்கு தமிழ் மறந்துடும்,

சவிதா: என்னங்க, இப்படி ஆயிடுச்சு. எப்படிங்க இவ, தமிழ் கத்துப்பா.

வருண்: எனக்கும் அதான் ஒண்ணும் புரியலை.

(அப்போது அக்க்ஷித் வருகிறார்)

வருண்: வாங்க அக்க்ஷித். எப்படி இருக்கீங்க?

அக்க்ஷித்: நான் நல்லா இருக்கேன். தமிழ் கத்துக்கிறது பத்தி பேசிக்கிட்டு இருந்தீங்க போல?

வருண்: ஆமாம். என் பொண்ணு தமிழ்ல பேசவே மாட்டேங்கிறா, கத்துக்கவும் மாட்டேங்கிறா.

அக்க்ஷித்: அதெல்லாம் கத்துக்க வச்சிடலாம்.

இலக்கியா:  எங்க! இவுங்க பொண்ணுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தா நமக்கு தான் தமிழ் மறந்து போயிடும்.

அக்க்ஷித்: ஆமா, இவுங்க யாரு?

சவிதா: இவுங்க இலக்கியா,

வருண்: இவுங்களும் உங்களை மாதிரி தமிழ் மேல ரொம்ப ஆர்வம் உள்ளவங்க.

(அக்க்ஷித்தும், இலக்கியாவும் வணக்கம் சொல்லிக்கொள்கிறார்கள்)

அக்க்ஷித்: இலக்கியா, நீங்க எங்க தமிழ் பள்ளியில ஆசிரியரா சேர்ந்துடுங்களேன். நான் அங்க தான் முதல்வரா இருக்கேன்.

இலக்கியா: அப்படியா, (யோசிக்கிறார்) சரி, நான் சேர்ந்துடுறேன்.

அக்க்ஷித்: கவலைப்படாதீங்க வருண், பேசாம உங்க மகளை பாலர் மலர் ஹோல்ஸ்வோர்தி தமிழ் பள்ளியில சேர்த்துடுங்க. அங்க அவள் நல்லா தமிழ் கத்துப்பா.

சவிதா: எப்படியோ, அவ தமிழ் கத்துக்கிட்டாபோதும்.  

(ஒரு வருடத்திற்கு பிறகு)

ஓவியா: வணக்கம். என் பேர் ஓவியா சம்பந்தம். நான் தமிழ் பள்ளியில படிக்கிறதுனால, தமிழை சுலபமா கத்துக்கிறேன். வீட்டுலேயும் தமிழ்ல தான் பேசுறேன்.

வருண்/சவிதா: அப்பாடா! இப்பத்தான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு.

பின் குறிப்பு:  இந்த நாடகத்தை சென்றவாரம் இங்குள்ள SBS வானொலிக்காக பதிவு செய்துவிட்டு வந்தோம்.
இந்த நாடகத்தில் மகளாக நடித்தது அடியேனின் மூத்த மகாராணியாகும்.
 

3 comments:

  1. Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழமையே.

      Delete
    2. அருமை. தங்களின் ஆர்வமான பங்களிப்பிற்கும் பிள்ளைகளுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
      பெற்றோர் வீட்டில் தமிழில் பேச வேண்டுமென்பதும் குழந்தைகளுடன் தமிழில் தான் உரையாட வேண்டுமென்பதும் பிள்ளைகள் தமிழைக் கற்றுக்கொள்ளச் சிறந்த வழி. சிறப்பன கருத்து.
      அன்புடன்
      சொ.வினைதீர்த்தன்.

      Delete