Tuesday, September 24, 2013

எட்டுதொகை நூல்கள்


எட்டுதொகை நூல்கள்

சிரஞ்சீவி மணிவாசகம், ஐந்தாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ்ப் பள்ளி, ஹோல்ஸ்வோர்தி
இந்த கட்டுரையில் நான் எட்டுதொகை நூல்கள் பற்றி விவரிக்கப்போகிறேன். இதில் எட்டுதொகை என்றால் என்ன, யார் இயற்றியது, எந்த காலகட்டத்தில் நடைபெற்றது, அதில் என்ன இருக்கிறது, அந்த கால சமுதாயத்திற்கு எவ்வாறு பயன்பட்டது, மற்றும் அதனால் எனக்கு என்ன பயன் என்பனவற்றை விரிவாக கீழே வரும் பத்திகளில் காண்போம்.
எட்டுதொகை அல்லது தொகை நூல்கள் என்பவை சங்க இலக்கியத்தில் பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டவை(1).  இவற்றில் பல பாடல்கள், அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும், புறத்தையும் பற்றி இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப் பட்டதால் தொகை எனப் பெயர்பெற்றது.
எட்டுதொகை நூல்களைப் பாடிய புலவர்கள் ஏறத்தாழ ஐநூற்றவர்(2). இதில் பெண்பாற் புலவர்களும் அடக்கம், இவர்கள் பல ஊர்களில் வாழ்ந்தவர்கள். பல்வேறு காலத்தவர்கள். பல்வேறு பிரிவினர்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பவர். இக்காலதில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் என்ப்படும். இப் பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுதொகை என்ற இரு பெரும் பிரிவாகப் பிரிதள்ளனர். எட்டுதொகை நூல்களை பின்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐந்குறுநூறு
                                                 ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
                                                 கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
                                                 இத்திறத்த எட்டுத் தொகை.
இவெட்டுத் தொகை நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். அகப்பொருள் பற்றிய நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை மற்றும் அகநானூறு ஆகிய ஆறு நூல்களும். புறப்பொருள் பற்றிய நூல்கள்: பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய நூல்களும் மற்றும் பரிபாடல் ஆகும்.
இப்பாடல்களில் பெருநில வேந்தர்களின் வெற்றிச் சிறப்புகளையும், போர்த்திறமையையும் விவரித்துக் கூறும் பாக்கள் பல; போரைத் தடுத்து அறிவு புகட்டுவன சில; வள்ளல் தன்மையை பாராட்டுவன பல; வருமையின் கொடுமையினை வருணிப்பன சில; மானமுடன் வாழ வழிகாட்டுவன  பல; ஆணும் பெண்ணும் மனம் இணைந்து வாழும் அன்பொழுக்கங்களை எடுத்துரைப்பன சில; வரலாற்றுக் குறிப்பினையும் புராண இதிகாச செய்திகளை குறிப்பிடுவன சில, பொதுவாக பழந்தமிழ் நாட்டின் வரலாற்றினை இதன் மூலமாக அறிகின்றோம்.
நற்றிணையின் அகச்சுவை நிறைந்த பாடல்களில் மக்கள் அறவாழ்வு, மன்னர் கொடை ஆட்சித்திரம், ஓருமைப்பாடு, பழந்தமிழர் பழக்க வழக்கங்கள், உவமைத்திரம், உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள், ஆகியவற்றைக் காண்கிறோம்(3). இப்பாடல்களைப் பாடியவர் பழந்தமிழர் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் கீழே காண்போம்.
எட்டுத்தொகை  நூல்களைக் குறிப்பிடும் வெண்பாவில் இதனை முதற்கண் நிறுத்தியுள்ளனர். 9 அடி முதல் 12 அடிவரையிலும் இதில் பாடல்கள் அமைந்துள்ளன. இந்நூலை தொகுத்தவர் இன்னார் என்று தெரியவில்லை. தொகைப்பித்தவர் பான்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதியார். திணை என்ற சொல் அகப்பொருள் கூறும் நூல்களுக்கு அமைந்த பெயராகும். திணை என்ற பெயரோடு  நல் என்னும் அடையும் சேர்ந்து நற்றிணை என வழங்குக்கின்றது.
நற்றிணை பாடல்களுக்கு சில எடுத்துக்காட்டை கீழே காணலாம்:
நீர் எவ்வாறு உலக வாழ்க்கைக்கு இன்றியமை யாததோ அவ்வாறே, தலைவி உயிருடன் இயங்கு வதற்குத் தலைவனது அருள் நிறைந்த காதல் நெஞ்சம் இன்றியமையாதது.
                 நீரின் றமையா  உலகம் போலத்
                   தம்மின் றமையா நன்னயந் தருளி  (பாடல்1)
செல்வக் குடியில் பிறந்த பெண் தான் புகுந்த இடத்தில் காணும் வறுமையைப் போக்க தாய் வீட்டை நாடுதல் இல்லை என்னும் சீரிய பண்பைக் கூறுகிறது பின்வரும் அடிகள்.
        கொண்ட கொழுநன் குடிவரன் உற்றெனக்
        கொடுத்த தாதை கொலுஞசோறு உள்ளாள் (பாடல்110)
இதுபோன்ற பகுதிகள் தமிழரின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் காட்டுகின்றன.
    
அகத்திணை புறத்திணை என்பன முறையே வீட்டையும், நாட்டையும் குறிப்பன(4). அகம் இன்பத்தினையும் புறம் அறம் பொருள் வீட்டினையும் குறிப்பன. கூர்ந்து கவனித்தால் அகத்தை செம்மைப்படுதுவத்தர்க்குத் துணையாகவே புறம் அமைந்துள்ள தென்பது புலனாகும். புறம் என்பதும் காவல் என்பதும் ஒன்றாகும். அறம் ஒற்றுமைக் காவலாகவும், பொருள் வேற்றுமை காவலாகவும் இருப்பன. எல்லாவுயிருக்கும் இன்பம் ஒன்றே இயல்பாகக் காணப்படுகிறது. அதனாலே, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனாரும்.
 
 
எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது  
    
 தானமர்ந்து வரூஉ மேவற் றாகும் 

என்றருளினர். இன்பமென்பது ஆணும் பெண்ணுமாகப் ஒன்றி வாழ்வது. அதுவே தலையாயதாகும். அவ்வாழ்வு ஓரறிவு முதல் ஐந்தறிவு முதலாகச் சொல்லப்படும் எல்லாவுயிர்களுக்கும் உள்ளது. ஆறறிவு படைத்த நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்தி  வழிகாட்டுவது அகன் ஐந்திணையாகும்.அகன் ஐந்திணையும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனச் சொல்லப்படும், இவை, முறையே அறம், பொருள், இன்பம், வீடு, பேறு என்னும் பயன்களை நல்கும் நிலைக்களமும் ஒழுக்கமும் ஆகும். இவையே பொருளுண்மை காட்டும் நமசிவாய என்னும் நற்றமிழ் மறைப் பொருளுமாகும்.
எட்டுத்தொகை நூல்களைப் பற்றி எழுதிய இந்தக் கட்டுரையில், எனக்கு ஏற்பட்ட பயன்களையும் அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். மேலே கூறப்பட்டுள்ள நற்றினைப் பாடல்களின் வாயிலாக ஒரு கணவன் மனைவி எவ்வாறு ஒழுக்கமுடன் வாழ வேண்டும் என்பதையும், தனி மனித வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தினையும் அறிந்து கொண்டேன். அது அந்த்தக்கால வாழ்க்கைக்கு மட்டுமல்லாது, இனி வரும் எல்லாக் காலத்திற்கும் பயனுள்ளதாக அமையும் இந்த எட்டுத்தொகைப் பாடல்கள் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.
எட்டுத்தொகைப் பாடல்களைப் பற்றி கட்டுரை எழுத எனக்கு கிடைத்த வாய்பின் மூலம், இன்னூலைப் பற்றி பெரிய அளிவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது தெரிந்த கொள்ள வாய்புக்கிட்டியதற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் இதேபோல் தமிழின் மற்ற சங்க இலக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
சான்றுக் குறிப்புகள்:
·         (1)http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88
·         (2)http://temple.dinamalar.com/news_detail.php?id=17594  
·(3)http://books.google.com.au/books?id=HJLkApp07JsC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false (டாக்டர் எம். நாராயணவேலுப்பிள்ளை)
·         (4)tamilvu.org
  
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment