சென்ற வாரம், எங்கள்
தமிழ் பள்ளியின் முழு ஆண்டு பரீட்சை
நடைபெற்றது. அதற்கு கேள்வித்தாள்களை தயார்
செய்வதிலும், மேலும் சென்ற சனிக்கிழமை
இரவு நானும் என் வீட்டு
அம்மணியும் "செல்போன் படுத்தும் பாடு" என்ற சிரிப்போம் சிந்திப்போம்
நிகழ்ச்சியை இங்கு சிட்னியில் ஒரு
மேடையில் வழங்கினோம். அதற்காக தயார் செய்வதிலும்
சென்ற வாரம் முழுக்க ஓடி
விட்டது. அதனால் என்னோட திரை
அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள முடியவில்லை. சரி, இந்த வாரமாவது,
அதை எழுதலாம் என்று நினைத்தால், பரீட்சை
எழுதிய மாணவர்களின் முடிவுகளை வரும் சனிக்கிழமையன்று சொல்லியாக வேண்டும்.
அதுவும் எல்லா வகுப்புகளுக்கும் "முதல் வகுப்பு(I
st class),இரண்டாம் வகுப்பு(II nd class) என்று வகைப்படுத்தி சொல்ல வேண்டும்,
அதனால் இந்த வாரமும் திரை
அனுபவங்களை என்னால் எழுத முடியவில்லை.
அதனால் அடுத்த வாரத்தில்
கண்டிப்பாக எழுதுகிறேன். அதுவரைக்கும் என்னுடைய வலைப்பூவை வந்து பார்த்துவிட்டு, எதுவும்
இல்லை என்று நினைத்து வெளியேற வேண்டாம். சிட்னியில்
நடைபெற்ற "உலக தமிழ் இலக்கிய
மாநாட்டில்" மாணவர்களுக்கான ஆய்வுக்கட்டுரையில் எங்கள் பள்ளியிலிருந்து மாணவர்கள்
ஆர்வமாக பங்கு பெற்றார்கள்.
அவர்களின் படைப்புகள் மாநாட்டு மலரில் வெளியாகியுள்ளது. அவை அனைத்தையும்
உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
I'M WAITING
ReplyDeleteகண்டிப்பாக இந்த வாரத்தில் எழுத ஆரம்பித்து விடுகிறேன்.
Delete