Monday, July 16, 2012

அமெரிக்காவில் அடியேன் – 3

நானும் நடந்து போயி விமானத்துக்கிட்ட போனேன். விமானம் இருக்கும்னு பார்த்தா, அங்க ஏதோ ஒரு வேன் மாதிரி சின்னதா ஒண்ணு நின்னுக்கிட்டு இருந்துச்சு. ஓ! இப்படியெல்லாம் கூட விமானம் இருக்கும்மான்னு ஒரே ஆச்சிரியமா போச்சு. இந்த டப்பா விமானத்தை பார்த்தவுடன், விமானத்து மேல இருந்த மதிப்பே போச்சு. அதுக்குள்ள ஏறுனவுடனே, இடது பக்கம் திரும்பி பார்த்தா வண்டிய ஓட்டுற டிரைவர் அண்ணாத்தை கண்ணுக்கு தெரிஞ்சாரு. என்னதான் வண்டி டப்பாவா இருந்தாக்கூட, இப்படி வண்டி ஒட்டுறவரை எல்லாம் பார்க்க முடியுதேன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம். ஆனாலும், விமானத்துக்குள்ள ஒரு வசதியும் இல்லை. பார்க்குறதுக்கு ஒரு வேன் மாதிரி இருந்தாலும்,நம்ம ஊர் வேன்ல இருக்கக்கூடிய வசதி கூட இல்லை. சீட்டை சாச்சுக்க கூட முடியலை. குத்த வச்ச பிள்ளையாராட்டம் உட்கார்ந்துக்கிட்டே போனேன். விமானத்தை எடுத்ததிலிருந்து, இறக்குற வரைக்கும் ஒரே கொர்ருன்னு” சத்தம் வேற. அமெரிக்காவில, உள்ளூர் விமானம் எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல. எப்படியோ ஒரு வழியா “san Jose”  வந்து சேர்ந்தேன். விமானத்தை விட்டு இறங்கினவுடனே சிட்னிலேருந்து வந்த இன்னொரு நண்பரை முதன் முதலா பார்த்தேன். ரெண்டு பேருமா பொட்டி எடுக்கிற இடத்துக்கு வந்தோம். பார்த்தா பொட்டி வந்த மாதிரியே தெரியலை. எனக்கு திருப்பியும் பயம் வந்துடுச்சு. ஆஹா! நம்ம பெட்டியை மாத்தி வேற விமானத்துல போட்டுட்டானுங்க போல இருக்கேன்னு நினைச்சேன். இப்படி ஏதாவது ஆகும்னு தெரிஞ்சு தான் சிட்னிலேருந்து கிளம்பும்போதே இன்சூரன்ஸ்க்கு தேவையான பேப்பர் எல்லாம் எடுத்து கைப்பொட்டில வச்சிருந்தேன். . நண்பர் அதுக்குள்ள அங்கிருந்த தகவல் மையத்துல போய் கேட்டாரு. அவுங்க நீங்க பெட்டி வர்றதுக்குள்ள வந்து பெட்டி எங்கன்னு கேட்டா நாங்க என்ன பண்றதுன்னு திருப்பி கேட்டாங்க. என்னடாது, நம்மலே ஆடி அசைஞ்சு அந்த விமான நிலையத்தை அனு அனுவா பார்த்துகிட்டு இவ்வளவு லேட்டா வரோம், இன்னமுமா பெட்டி வராம இருக்குன்னு ஒரே ஆச்சிரியமா இருந்துச்சு. கடைசில, நான் பயந்த மாதிரி எல்லாம் ஆகாம, என்னோட பெட்டி ரொம்ப சமர்த்தா என்கிட்ட வந்து சேர்ந்துச்சு. அப்புறம் நானும் அந்த நண்பரும் ஒரு டாக்ஸி பிடித்து ஹில்டன் ஹோட்டலுக்கு போனோம். நாங்க போனபோது மணி 11.30 தான் ஆச்சு. Check-in 3 மணிக்கு தான் போட்டிருந்துச்சு. 3 மணி வரைக்கும் ஹோட்டல் வாசல்ல உட்கார்ந்து கூர்கா வேலை தான் பார்க்க போறோம் நினைச்சோம். நல்ல வேளை, எங்களுக்கு எங்க அறையோட சாவியை கொடுத்துட்டாங்க. உடனே நண்பருக்க ஒரு பெரிய சந்தேகம் வந்துடுச்சு, இந்த ஹோட்டல் சுமாரான ஹோட்டல்லா இருக்கும் போலன்னு சொன்னாரு. நான் உடனே, இது பெரிய ஸ்டார் ஹோட்டலுங்க, ஏன் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துச்சுன்னு கேட்டேன். அதுக்கு அவரு 3மணி check-inனுக்கு, 11.30 மணிக்கெல்லாம் சாவியை கொடுத்துட்டாங்களே, கூட்டம் இல்லாததுனால தானே முடிஞ்சுது அப்ப இது சுமாரான ஹோட்டல் தானே அப்படின்னாரு. ஆஹா! ஒரு பெரிய கண்டுபிடிப்பை இல்ல கண்டுப்பிடிச்சிருக்காருன்னு நினைச்சுக்கிட்டு, ஏங்க நமக்கு வந்தவுடனே ரூம் கிடைச்சுதேன்னு சந்தோசப்படுவீங்களா, அதைவிட்டுட்டு இப்படி ஆராய்ச்சி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்களேனேன்னு சொல்லி அவுங்க அவுங்க ரூமுக்கு போனோம். போயி நல்லா அசதி போக குளிச்சுட்டு கீழே வரவேற்பறைக்கு வந்தோம். பசி வேற வயித்தைக் கிள்ள ஆரம்பிச்சுடுச்சு. பக்கத்துல எங்க ஹோட்டல்னு கேட்டோம். பக்கத்துல தான் இருக்குனு சொன்னாங்க. சரின்னு நாங்களும் நடக்க ஆர்ம்பிச்சோம். நடந்தோம்,நடந்தோம், நடந்துக்கிட்டே இருந்தோம், ஹோட்டல் தான் வந்த பாடு இல்லை. நடக்கும்போது தான் தெரிஞ்சுது, அந்த இடம் ஒரு இண்டஸ்டிரியல் இடம்னு. நாங்களும் கிட்டதட்ட ஒரு ரெண்டு கிலோமீட்டர் தூரம் வரைக்கும் நடந்திருப்போம், ஒரு ஹோட்டல் கூட கண்ணுக்கு தென்படவேயில்லை. இங்க வேலை பார்க்கிறவுங்க எல்லாம் நம்மளை மாதிரி தினமும் சாப்பாட்டு மூட்டையை கட்டிக்கிட்டு வந்துடுவாங்க போலன்னு நினைச்சுக்கிட்டேன். கடைசியா ஒரு ஹோட்டலை கண்டுப்பிடிச்சோம். நாங்க போன நேரம் பஃப்பே நேரமாம், அதனால பீட்ஸா, பாஸ்தா இதெல்லாம் ஏழரை டாலருக்கு எவ்வளவு வேனாலும் சாப்பிடலாம்னு சொன்னாங்க. ஆஹா! புண்ணியவானுங்க, நம்ம பசி அறிஞ்சு நமக்கு ரொம்ப செலவில்லாம சாப்பாடு போடுறானுங்கன்னு நினைச்சுக்கிட்டு, எல்லாத்தையும் வெளுத்துக் கட்டினோம். கடைசில பில்லு போடுற எடத்துல பார்த்தா எட்டரை டாலர்னு சொன்னாங்க.  ஏழரைன்னு சொன்னிங்க, சாப்பிட்டதுக்கப்புறம் விலையை கூட்டி சொல்றீங்கன்னு கேட்டா, நாங்க எல்லாத்துலையும் வெளிப்படையா இருப்போம். விலைல கூட, விலை தனியா, வரி தனியான்னு போடுவோம்ன்னு சொன்னாங்க. அடப்பாவிகளா! எல்லாத்தையும் ஒரே விலையா பார்த்து பழகிப் போன எங்களுக்கு இது ரொம்ப பெரிய கஷ்டமா இருக்குமேன்னு நினைச்சு, பில்லை கட்டிட்டு, திருப்பியும் சாப்பிட்ட சாப்பாடு எல்லாம் செறிச்சிடுற அளவுக்கு திரும்பி ஹோட்டலுக்கு நடந்தோம்.
எங்களுக்கு மறு நாள் மாலையிலிருந்து தான் கல்வி மாநாடு. மறு நாள் என்ன பண்னினேன்ன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                               பகுதி-4

No comments:

Post a Comment