Saturday, May 19, 2012

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த தமிழர்கள்

இளைஞர்களே! கனவு காணுங்கள்,கண்டிப்பாக ஒரு நாள் அந்த கனவு நிஜமாகும் என்றார் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல்கலாம். இந்த வார்த்தை ஒரு சத்தியமான வார்த்தை என்று நிருபித்திருக்கிறார்கள், இந்த வருடம் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற நம் தமிழர்கள். நம்மில் நிறைய பேர், ஒரு காரியத்தில் இறங்கும்போது, ஒரு சின்ன தடங்கல் வந்தா போதும், அவ்வளவுதான், நம்மால அந்த காரியத்தை செய்ய முடியாதுன்னு ஒதுங்கி விடுகிறோம். ஆனா, அந்த தேர்வில் வெற்றிப்பெற்ற சிலரின் பேட்டியை பத்திரிக்கையில் படித்த போதுதான் தெரிஞ்சது, அவுங்க எந்த அளவுக்கு தடைகளை முறியடித்து வெற்றிபெற்று இருக்காங்கன்னு. உதாரணத்துக்கு, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதேயான பிரசன்ன வெங்கடேஷ் எந்த சூழ்நிலையில அந்த தேர்வை எழுதி ஐ.ஏ.எஸ். ஆகியிருக்காருன்னு தெரிஞ்சா, கண்டிப்பா மற்றவர்களுக்கு அது ஒரு பாடமாகவே இருக்கும். ரொம்ப சின்ன வயசுலேயே தந்தையை இழந்து, அண்ணனோட தயவுல வளர்ந்திருக்காரு. தாயும் வேற இருதய கோளாறு காரணமா உடல் நிலை சரி இல்லாம இருந்திருக்காங்க. இத்தனைக்கும் நடுவுல, தான் படிச்சு கலெக்டர் ஆகனும்னு கனவு கண்டிருக்காரு. அவரின் தாயும் தன் மகனை கலெக்டராகவே கற்பனை பண்ணி வாழ்ந்து வந்திருக்காங்க. அவரால முதல் தடவை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற முடியலை. அவருடைய தாய், அந்த நேரத்துல ஆறுதலா இருந்து, அந்த தோல்வியிலிருந்து அவரை மீள வச்சிருக்காங்க. அதுக்கப்புறம் தூத்துக்குடி துறைமுகத்துல ஏதோ கிடைச்ச வேலைல சேர்ந்து, இன்னும் தீவிரமா முயற்ச்சி செஞ்சு, முதல் கட்ட தேர்வில வெற்றிபெற்று நம்பிக்கையோட இருந்தப்ப தான், முக்கியத் தேர்வுகளுக்கு மூன்று நாள் முன்னாடி, அவருடைய கலெக்டர் கனவிற்கு உறுதுணையா இருந்த அம்மா தவறிட்டாங்க. ரெண்டு நாளா சாப்பிடாம அழுதுக்கிட்டு இருந்த அவரை, அவரோட அண்ணன் தான் தேத்தி பஸ் ஏற்றி சென்னைக்கு அனுப்பியிருக்காரு. தன்னோட இலட்சியமும், தன் அம்மோவோட கனவும் நிறைவேறணும்னு ஒரு வெறியோட எல்லாத் தேர்வுகளையும் எழுதி ஐ.ஏ.எஸ்.ல தேர்வாகி இருக்காரு. இப்ப சொல்லுங்க, இவரோட வாழ்க்கை, எத்தனை பேருக்கு ஒரு பாடமா இருக்கும்னு. சின்ன வயசுலேயே தந்தையை இழந்து, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மூன்று நாள் முன்னாடி தன்னோட தாயையும் இழந்து ஐ.ஏ.எஸ்.  ஆகியிருக்காருன்னா, அவரோட மன உறுதியை நாம பாராட்டாம இருக்க முடியாது. இவர் மட்டும் இல்லை, இந்த மாதிரி இந்த வருட சிவில் சர்வீஸ் தேர்வுல வெற்றிபெற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆனவுங்க எல்லோருமே பல தடைகளை தாண்டித்தான் வந்திருக்காங்க.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற இந்த வரிகளுக்கு, நம்முடைய தமிழர்கள் மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார்கள்னு நினைக்கும் போது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது.   


2 comments:

  1. My B.E class mate selected in this civil service exam and he is now IAS officer in north U.P
    HE WROTE EXAM IN TAMIL

    Haritha

    ReplyDelete
  2. சோதனையை கடந்து சாதனை படைத்துள்ளார். பிரசன்ன வெங்கடேஷ்ற்கு வாழ்த்துக்கள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete